இந்தியா- பட்ஜெட் 2013 - சுகாதாரத்துறை
****************************************
சுதந்திர இந்தியாவின் 65வது வருடாந்திர பட்ஜெட் சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
'2014ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்' என்ற காரணத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் .
எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா ?
இந்த பட்ஜெட், சுகாதாரத்துறையை எந்த வகையில் பாதிக்கும் ?
# " சுகாதாரத்துறைக்கு இந்த ஆண்டு ரூ.37,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 28 % அதிகம் "
இது போதுமா ? போதாதா ? மகிழ்ச்சி தரக்கூடியதா ?
ஒரு நாட்டில் மக்கள் உயிருக்கு, அரசு எவ்வுளாவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை, அரசு தனது மொத்த வருமானத்தில் சுகாதாரத்துறைக்கு எவ்வுளவு சதவிகிதம் ஒதுக்கியுள்ளது ( % of GDP spent on health ) என்பதை வைத்து சொல்ல முடியும். இந்தியாவில் தற்பொழுது இது வெறும் 1 % .
அதாவது இந்தியாவின் மொத்த வருமானத்தில் 1 % மட்டுமே மக்களின் உடல் நலத்திற்கு ஒதுக்கியுள்ளது நம் அரசு . ஆனால் 'இது போதாது, இது 2.5 சதவிதமாக இருக்க வேண்டும்' என்று திட்டக் கமிஷனே கூறுகிறது.
வளர்ந்த நாடுகளான ஃப்ரான்ஸில் 11 % அமெரிக்காவில் 15 % இங்கிலாந்தில் 8.5 % சுகாதாரத்துறைக்கு ஒதுக்கி உள்ளனர். நைஜீரிய நாடு கூட நம்மை விட அதிக நிதியை சுகாதாரத்திற்கு ஒதுக்குகிறது. இந்தியாவில் மட்டும் இவ்வுளவு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஏன் ? நம்ம நாட்டு மக்களின் உயிர், மற்ற நாட்டு மக்களைக் காட்டிலும், கொஞ்சம் cheap தானே.
பாதுகாப்புத்துறைக்கு (defence) இந்த ஆண்டு ரூ.2,00,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது (சென்ற ஆண்டு ரூ.193,407 கோடி) அதாவது மக்களின் சுகாதாரத்துறையைவிட பாதுகாப்புத்துறைக்கு 5 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பும் முக்கியம் தானே என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி :
ராணுவத்திற்கு செலவு செய்யப்படும் பட்ஜெட் பற்றி SIPRI அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான் 1 % GDP செலவு செய்கிறது. ஜெர்மனி 1.3 %, ஃப்ரான்ஸ் 2.3 % தான் செலவு செய்கிறது.
ஆனால் இந்தியாவோ இவற்றை எல்லாம் விட அதிகளவு ராணுவத்திற்கு செலவு செய்கிறது - 2.6 %
சீனாவே 2 % தான் செலவு செய்கிறது.
காலம் காலமாக நம் நாட்டில் 'aam aadmi' (சாமானியர்)ஐ விட 'arms aadmi'க்கு தான் நிறைய முக்கியத்துவம் .
# NRHM (National Rural Health Mission) எனப்படும் தேசிய ஊரக சுகாதார இயக்கம் என்பது கிராமப்புற மக்களின் சுகாதாரத்திறக்காக (குறிப்பாக கர்ப்பவதிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக க்ஷ்) மத்திய அரசால் 2005ல் துவங்கப்பட்ட திட்டம் . மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் ரூ.21,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தை காட்டிலும் 24 % அதிகம். சந்தோஷமான செய்தி.
நகர்புற ஏழை மக்களுக்கு இது மாதிரியான திட்டம் ஏதும் இல்லாதது நீண்ட நாள் குறையாக இருந்தது . இதனை போக்க National Urban Health Mission (NUHM) துவங்குவதாக சில ஆண்டுகளாக பேசப்பட்டது . தற்பொழுது தான் அதற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
அப்படியானால் NUHM துவங்கப்படுகிறதா ? அது தான் கிடையாது.
தற்பொழுது NRHM மற்றும் NUHM என்ற இரண்டையும் சேர்த்து National Health Mission (கிராமம் மற்றும் நகர்புறம்) துவங்குகிறார்கள்.
நல்ல விஷயம் தானே. இதில் என்ன பிரச்சனை ?
நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கு.
குழந்தையே பிறக்கவில்லை. அதுக்கு முன்பே பெயர் வைத்துள்ளார்கள்.
முதலில் NUHM துவங்கியிருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் அதனை இன்னொரு திட்டத்தோட இணைத்திருக்க வேண்டும்.
# இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 4 கோடி பேர் நோய்வாய்பட்ட காரணத்தினால் ஏழைகளாக்கப்படுகிறார்கள்.
காரணம் ? பெருகி வரும் மருத்துவ செலவு .
உதாரணம் : ஒரு நடுத்தர குடும்பம் . எதிர்பாராத விதமாக குடும்பத் தலைவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. அவரால் வேலைக்கு செல்ல முடியாது. அவரின் மருத்துவ செலவிற்கு என்ன செய்வது ? அவர் மனைவிக்கு வீட்டு வேலையை தவிர வேறு வேலை தெரியாது. மருத்துவ செலவிற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் வீட்டில் உள்ள நகை பணம் மற்றும் சொத்துகளை அடகு வைக்க/விற்க வேண்டி வரும். கடன் வாங்கியாக வேண்டிய நிலை. அவரின் குடும்பம் வறுமைகோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுவிடும்.
இதை தடுக்கவே பல நாடுகளில் காப்பீட்டுத்திட்டம் உள்ளது. நோய்வாய்படும் போது மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
இங்கிலாந்தில் எல்லோரும் பயன் பெறும் வகையில் Universal Health Coverage உள்ளது. இந்தியாவில் வசதியானவர்களே இதனை பயன்படுத்துகின்றனர். காரணம் பிரீமியம் கட்ட வேண்டுமே.
சில ஆண்டுகளுக்கு முன், வறுமைக்கோட்டிக்கு கீழ் உள்ளவர்களுக்காக Rashtriya Swasthiya Bima Yojana (RSBY) என்னும் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டது. 3.5 கோடி குடும்பங்கள் இதன் மூலம் பயன் பெற்றதாக அரசு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.18,115 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரூ.20,822 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளாது.
இந்தாண்டு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்கள்,துப்புரவு பணியாளர்கள், சுரங்கத்தில் பணியாற்றுபவர்கள் , மற்றும் குப்பை பொறுக்குபவர்களும் இத்திட்டத்தில் பயணாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது வரவேற்க வேண்டிய ஒன்று .
# "சிகரெட் உற்பத்தி வரி 18 % அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் விலை உயரும். "
உடலுக்கு தீமை தரும் புகையிலை (சிகரெட்) பழக்கத்தை குறைக்க, வரியை அதிகப்படுத்தி விலையேற்றுவது ஒரு சிறந்த வழி என்று பல நாட்டு ஆராய்ச்சிகள் கூருகின்றன. அதனால் சிகரெட் விலை உயர்வு வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி இது 65 % ஆக இருக்க வேண்டும்.அதே போல் பெறும்பாலான மக்கள் புகைக்கும் பீடியின் விலை உயர்தப்படாதது வருத்தமளிக்கிறது.
# "மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது"
All India Institute of Medical Sciences எனப்படும் எய்ம்ஸிற்கு (AIIMS) ரூ. 1124 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பலருக்கு மகிழ்ச்சியளித்தாலும் எய்ம்ஸ் மாணவரான எனக்கே இதில் உடன் பாடில்லை.
"நாட்டின் தலை சிறந்த மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியது சரி தான். இந்தியாவிற்கு பெருமை தரும் ஆராய்ச்சிகள் பல நிகழும்" என்று கூறுபவர்களுக்கு, ஒரு கேள்வி : " திண்டுக்கல் , கும்பகோணம் ,கடலூர் அரசு மருத்துவமனைகள் முக்கியமில்லையா? அதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க வேண்டாமா ?
கொழுக் மொழுக் குழந்த்தைக்கு மட்டும் லட்டு கொடுத்துவிட்டு, மற்ற நோஞ்சான் குழந்தைகளுக்கு ரொட்டி கூட கொடுக்காமல் தள்ளிவிடுவது நியாயமா ?
மாவட்ட மருத்துவமனைகளை முன்னேற்ற எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லையே . ஒதுக்கீடும் இல்லையே.
ஏன் இந்த ஏற்றத்தாழ்வு ,பாகுபாடு ? எய்ம்ஸ் மட்டும் தான் இந்தியாவா ?
# டெல்லி எய்ம்ஸில் வழங்கப்படும் தலை சிறந்த சிகிச்சை, நாட்டின் பிற பகுதி மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், எய்ம்ஸ் போன்றே 6 புதிய மருத்துவமனைகள் (AIIMS-like institutions) சென்ற ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அதற்கு ரூ.1670 கோடி ஒதுப்பட்டுள்ளது.மகிழ்ச்சி.
ஆனால் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் AIIMS-like institution ஒன்று கூட துவங்கப்படவில்லையே . ஏன் ?
அந்த 6 புதிய மருத்துவமனைகளில் ஒன்று கூட தென்னிந்தியாவில் இல்லையே ஏன் ?
ஆயிரம் காரணம் சொன்னாலும், இதைக் கூட நமக்கு பெற்றுத்தர முடியாதவர் தான் நம்ம ஊரைச் சேர்ந்த சுகாதாரத்துறை இணையமைச்சர். (நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் . அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். )
# முதியவர்களின் ஆரோக்கியத்திற்காக "national programme for the healthcare of the elderly " என்னும் திட்டம் துவங்கப்படவுள்ளது. நாட்டில் மொத்தம் 13 கோடி முதியோர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி தான்.
ஆனால் இதற்காக வெறும் 150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் குறிப்பிட்ட 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் . ஆக ஒரு சென்டருக்கு 1.5 கோடி மட்டும் .போதாது தான். ஆனால் இதுவே துவக்கம். வரவேற்கப்பட வேண்டிய திட்டம் .
# Integrated Child Development Scheme (icds) திட்டத்திற்கு ரூ.17,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
அங்கன்வாடியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக உணவு வழங்குவார்களே, அந்த திட்டம் தான் இது . இத்திட்டத்திற்கு சென்ற வருடத்தில் ஒதுக்கப்பட்டதை (ரூ.15,850 crore) விட இந்த வருடம் 11% அதிகம் . வசதியில்லாத குழந்தைங்களுக்கு சோறு போடுற இந்த உன்னத திட்டத்தை பல நாடுகள் பாராட்டுனாங்க.
ஆனா நடந்தது என்ன ?
எல்லா முதலையும் சாப்பிட்டது போக குழந்தைகளுக்கு எதுவும் மிஞ்சல. இந்த திட்டத்துல இருக்குற பெரிய குறையே ஊழல் தான். அதை சரி செய்யாதவரை, எவ்வுளவு பணம் ஒதுக்குனாலும் அது ஆற்றில் கொட்டிய வெல்லம் போல தான்.
# பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள "Food Security Bill." (உணவு பாதுகாப்பு மசோதா ) இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றுப்படும் என நிதி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நம்ம ப.சி க்கு பசி கொடுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.ஆனால் என்ன செய்வது.பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு வேளை இதை நிறைவேற்றினால் டெல்லி இருக்கும் திசைய பார்த்து ஒரு கும்பிடு போடுவோம்.
# AYUSH எனப்படும் Ayurveda, Yoga, Unani, Sidddha and Homoeopathy போன்ற மருத்துவத்திற்கு ரூ.1,069 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய செய்தி. இந்த AYUSH எனப்படுவது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாற்று மருத்துவ முறை. அல்லோபதி மருத்துவ முறையில் நம்பிக்கையில்லாதவர்கள் இதனை பின்பற்றுகிறார்கள். தெருவுக்கு தெரு உள்ள +2 கூட படிக்காத, ஆபத்தான போலி மருத்துவர்களின் கொட்டத்தை அடக்க , படித்த AYUSH மருத்துவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
# "பெண்களுக்கு தனியாக வங்கிகள் துவக்கப்படும்''னு அறிவிச்ச உடனே எதிர்கட்சி தலைவி உட்பட , நாடாளுமன்றத்தில் இருந்த அத்தனை பெண்கள் முகத்திலும் சந்தோஷம்.
" வங்கி துவங்குறதெல்லாம் சரி சார். முதல்ல , இருக்குற வங்கிகள்ல , பெண்களுக்கு தனியா கழிப்பறை கட்டுங்க"னு யாருமே கோரிக்கை வைக்கவில்லையே.
# "நிர்பாயா திட்டம் "- டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் பெண்களின் பாதுகாப்பிற்காக 1000 கோடி செலவில் "நிர்பாய திட்டம் " துவங்கப்படுகிறது. இத்திட்டத்தை பற்றி வேறெதுவும் தகவல் கிடைக்கவில்லை.
# குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகத்துக்கு ரூ.15, 000 கோடி ; மதிய உணவு திட்டத்திற்கு ரூ.13,250 கோடி; மனநலம், காச நோய் , தொழு நோய் போன்றவற்றிக்கு 2,375 கோடி ஒதுக்கப்பள்ளாது . ஆனால் இவற்றை பற்றி மேற்கொண்டு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
# எந்த மருத்திற்கும் இந்தாண்டு புதிதாக வரிவிலக்கு கொடுக்கப்படவில்லை.
# பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'infrastructure status' சுகாதாரத்துறைக்கு கொடுக்கப்படவில்லை.
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறை சம்பந்தமாக எனக்கு கிடைத்த தகவல்களை கொடுத்துவிட்டேன்.http://www.youtube.com/watch?v=aRqx-MS2ZdE
சரி, சுகாதாரத்துறைய பொறுத்தவரை இந்த பட்ஜெட் எப்படி ?
புதுசா சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லை தான்.
ஆனால் நிதி பற்றாக்குறையான இந்த சமயத்தில், நடுத்தர குடும்பத் தலைவன் தன் வீட்டிற்க்கு போடும் பட்ஜெட்டை போன்றே, சாமர்த்தியமாக பட்ஜெட் போட்டுள்ளார் நமது நிதியமைச்சர்.
"வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வர வேண்டும்'' என்று அண்மையில் சொல்லப்பட்டது.
திரு ப.சிதம்பரம் அவர்களுக்கு அந்த திறமை இருக்கிறது. ஆனால் வாய்ப்பில்லை.
அவர் சார்ந்த கட்சி அடையாளத்தை தவிர்த்து பார்த்தால் , நிதியமைச்சருக்கு நான் சொல்லிக்கொள்வது: "சபாஷ் சார்".
அன்புடன் பாலாஜி.
(நான் health economics துறையில் expert கிடையாது. வளரும் மாணவன். பட்ஜெட் குறித்து நான் எழுதியதில் தவறு இருந்தால் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.)

****************************************
சுதந்திர இந்தியாவின் 65வது வருடாந்திர பட்ஜெட் சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
'2014ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்' என்ற காரணத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் .
எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா ?
இந்த பட்ஜெட், சுகாதாரத்துறையை எந்த வகையில் பாதிக்கும் ?
# " சுகாதாரத்துறைக்கு இந்த ஆண்டு ரூ.37,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 28 % அதிகம் "
இது போதுமா ? போதாதா ? மகிழ்ச்சி தரக்கூடியதா ?
ஒரு நாட்டில் மக்கள் உயிருக்கு, அரசு எவ்வுளாவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை, அரசு தனது மொத்த வருமானத்தில் சுகாதாரத்துறைக்கு எவ்வுளவு சதவிகிதம் ஒதுக்கியுள்ளது ( % of GDP spent on health ) என்பதை வைத்து சொல்ல முடியும். இந்தியாவில் தற்பொழுது இது வெறும் 1 % .
அதாவது இந்தியாவின் மொத்த வருமானத்தில் 1 % மட்டுமே மக்களின் உடல் நலத்திற்கு ஒதுக்கியுள்ளது நம் அரசு . ஆனால் 'இது போதாது, இது 2.5 சதவிதமாக இருக்க வேண்டும்' என்று திட்டக் கமிஷனே கூறுகிறது.
வளர்ந்த நாடுகளான ஃப்ரான்ஸில் 11 % அமெரிக்காவில் 15 % இங்கிலாந்தில் 8.5 % சுகாதாரத்துறைக்கு ஒதுக்கி உள்ளனர். நைஜீரிய நாடு கூட நம்மை விட அதிக நிதியை சுகாதாரத்திற்கு ஒதுக்குகிறது. இந்தியாவில் மட்டும் இவ்வுளவு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஏன் ? நம்ம நாட்டு மக்களின் உயிர், மற்ற நாட்டு மக்களைக் காட்டிலும், கொஞ்சம் cheap தானே.
பாதுகாப்புத்துறைக்கு (defence) இந்த ஆண்டு ரூ.2,00,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது (சென்ற ஆண்டு ரூ.193,407 கோடி) அதாவது மக்களின் சுகாதாரத்துறையைவிட பாதுகாப்புத்துறைக்கு 5 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பும் முக்கியம் தானே என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி :
ராணுவத்திற்கு செலவு செய்யப்படும் பட்ஜெட் பற்றி SIPRI அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான் 1 % GDP செலவு செய்கிறது. ஜெர்மனி 1.3 %, ஃப்ரான்ஸ் 2.3 % தான் செலவு செய்கிறது.
ஆனால் இந்தியாவோ இவற்றை எல்லாம் விட அதிகளவு ராணுவத்திற்கு செலவு செய்கிறது - 2.6 %
சீனாவே 2 % தான் செலவு செய்கிறது.
காலம் காலமாக நம் நாட்டில் 'aam aadmi' (சாமானியர்)ஐ விட 'arms aadmi'க்கு தான் நிறைய முக்கியத்துவம் .
# NRHM (National Rural Health Mission) எனப்படும் தேசிய ஊரக சுகாதார இயக்கம் என்பது கிராமப்புற மக்களின் சுகாதாரத்திறக்காக (குறிப்பாக கர்ப்பவதிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக க்ஷ்) மத்திய அரசால் 2005ல் துவங்கப்பட்ட திட்டம் . மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் ரூ.21,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தை காட்டிலும் 24 % அதிகம். சந்தோஷமான செய்தி.
நகர்புற ஏழை மக்களுக்கு இது மாதிரியான திட்டம் ஏதும் இல்லாதது நீண்ட நாள் குறையாக இருந்தது . இதனை போக்க National Urban Health Mission (NUHM) துவங்குவதாக சில ஆண்டுகளாக பேசப்பட்டது . தற்பொழுது தான் அதற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
அப்படியானால் NUHM துவங்கப்படுகிறதா ? அது தான் கிடையாது.
தற்பொழுது NRHM மற்றும் NUHM என்ற இரண்டையும் சேர்த்து National Health Mission (கிராமம் மற்றும் நகர்புறம்) துவங்குகிறார்கள்.
நல்ல விஷயம் தானே. இதில் என்ன பிரச்சனை ?
நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கு.
குழந்தையே பிறக்கவில்லை. அதுக்கு முன்பே பெயர் வைத்துள்ளார்கள்.
முதலில் NUHM துவங்கியிருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் அதனை இன்னொரு திட்டத்தோட இணைத்திருக்க வேண்டும்.
# இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 4 கோடி பேர் நோய்வாய்பட்ட காரணத்தினால் ஏழைகளாக்கப்படுகிறார்கள்.
காரணம் ? பெருகி வரும் மருத்துவ செலவு .
உதாரணம் : ஒரு நடுத்தர குடும்பம் . எதிர்பாராத விதமாக குடும்பத் தலைவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. அவரால் வேலைக்கு செல்ல முடியாது. அவரின் மருத்துவ செலவிற்கு என்ன செய்வது ? அவர் மனைவிக்கு வீட்டு வேலையை தவிர வேறு வேலை தெரியாது. மருத்துவ செலவிற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் வீட்டில் உள்ள நகை பணம் மற்றும் சொத்துகளை அடகு வைக்க/விற்க வேண்டி வரும். கடன் வாங்கியாக வேண்டிய நிலை. அவரின் குடும்பம் வறுமைகோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுவிடும்.
இதை தடுக்கவே பல நாடுகளில் காப்பீட்டுத்திட்டம் உள்ளது. நோய்வாய்படும் போது மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
இங்கிலாந்தில் எல்லோரும் பயன் பெறும் வகையில் Universal Health Coverage உள்ளது. இந்தியாவில் வசதியானவர்களே இதனை பயன்படுத்துகின்றனர். காரணம் பிரீமியம் கட்ட வேண்டுமே.
சில ஆண்டுகளுக்கு முன், வறுமைக்கோட்டிக்கு கீழ் உள்ளவர்களுக்காக Rashtriya Swasthiya Bima Yojana (RSBY) என்னும் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டது. 3.5 கோடி குடும்பங்கள் இதன் மூலம் பயன் பெற்றதாக அரசு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.18,115 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரூ.20,822 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளாது.
இந்தாண்டு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்கள்,துப்புரவு பணியாளர்கள், சுரங்கத்தில் பணியாற்றுபவர்கள் , மற்றும் குப்பை பொறுக்குபவர்களும் இத்திட்டத்தில் பயணாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது வரவேற்க வேண்டிய ஒன்று .
# "சிகரெட் உற்பத்தி வரி 18 % அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் விலை உயரும். "
உடலுக்கு தீமை தரும் புகையிலை (சிகரெட்) பழக்கத்தை குறைக்க, வரியை அதிகப்படுத்தி விலையேற்றுவது ஒரு சிறந்த வழி என்று பல நாட்டு ஆராய்ச்சிகள் கூருகின்றன. அதனால் சிகரெட் விலை உயர்வு வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி இது 65 % ஆக இருக்க வேண்டும்.அதே போல் பெறும்பாலான மக்கள் புகைக்கும் பீடியின் விலை உயர்தப்படாதது வருத்தமளிக்கிறது.
# "மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது"
All India Institute of Medical Sciences எனப்படும் எய்ம்ஸிற்கு (AIIMS) ரூ. 1124 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பலருக்கு மகிழ்ச்சியளித்தாலும் எய்ம்ஸ் மாணவரான எனக்கே இதில் உடன் பாடில்லை.
"நாட்டின் தலை சிறந்த மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியது சரி தான். இந்தியாவிற்கு பெருமை தரும் ஆராய்ச்சிகள் பல நிகழும்" என்று கூறுபவர்களுக்கு, ஒரு கேள்வி : " திண்டுக்கல் , கும்பகோணம் ,கடலூர் அரசு மருத்துவமனைகள் முக்கியமில்லையா? அதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க வேண்டாமா ?
கொழுக் மொழுக் குழந்த்தைக்கு மட்டும் லட்டு கொடுத்துவிட்டு, மற்ற நோஞ்சான் குழந்தைகளுக்கு ரொட்டி கூட கொடுக்காமல் தள்ளிவிடுவது நியாயமா ?
மாவட்ட மருத்துவமனைகளை முன்னேற்ற எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லையே . ஒதுக்கீடும் இல்லையே.
ஏன் இந்த ஏற்றத்தாழ்வு ,பாகுபாடு ? எய்ம்ஸ் மட்டும் தான் இந்தியாவா ?
# டெல்லி எய்ம்ஸில் வழங்கப்படும் தலை சிறந்த சிகிச்சை, நாட்டின் பிற பகுதி மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், எய்ம்ஸ் போன்றே 6 புதிய மருத்துவமனைகள் (AIIMS-like institutions) சென்ற ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அதற்கு ரூ.1670 கோடி ஒதுப்பட்டுள்ளது.மகிழ்ச்சி.
ஆனால் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் AIIMS-like institution ஒன்று கூட துவங்கப்படவில்லையே . ஏன் ?
அந்த 6 புதிய மருத்துவமனைகளில் ஒன்று கூட தென்னிந்தியாவில் இல்லையே ஏன் ?
ஆயிரம் காரணம் சொன்னாலும், இதைக் கூட நமக்கு பெற்றுத்தர முடியாதவர் தான் நம்ம ஊரைச் சேர்ந்த சுகாதாரத்துறை இணையமைச்சர். (நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் . அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். )
# முதியவர்களின் ஆரோக்கியத்திற்காக "national programme for the healthcare of the elderly " என்னும் திட்டம் துவங்கப்படவுள்ளது. நாட்டில் மொத்தம் 13 கோடி முதியோர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி தான்.
ஆனால் இதற்காக வெறும் 150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் குறிப்பிட்ட 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் . ஆக ஒரு சென்டருக்கு 1.5 கோடி மட்டும் .போதாது தான். ஆனால் இதுவே துவக்கம். வரவேற்கப்பட வேண்டிய திட்டம் .
# Integrated Child Development Scheme (icds) திட்டத்திற்கு ரூ.17,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
அங்கன்வாடியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக உணவு வழங்குவார்களே, அந்த திட்டம் தான் இது . இத்திட்டத்திற்கு சென்ற வருடத்தில் ஒதுக்கப்பட்டதை (ரூ.15,850 crore) விட இந்த வருடம் 11% அதிகம் . வசதியில்லாத குழந்தைங்களுக்கு சோறு போடுற இந்த உன்னத திட்டத்தை பல நாடுகள் பாராட்டுனாங்க.
ஆனா நடந்தது என்ன ?
எல்லா முதலையும் சாப்பிட்டது போக குழந்தைகளுக்கு எதுவும் மிஞ்சல. இந்த திட்டத்துல இருக்குற பெரிய குறையே ஊழல் தான். அதை சரி செய்யாதவரை, எவ்வுளவு பணம் ஒதுக்குனாலும் அது ஆற்றில் கொட்டிய வெல்லம் போல தான்.
# பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள "Food Security Bill." (உணவு பாதுகாப்பு மசோதா ) இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றுப்படும் என நிதி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நம்ம ப.சி க்கு பசி கொடுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.ஆனால் என்ன செய்வது.பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு வேளை இதை நிறைவேற்றினால் டெல்லி இருக்கும் திசைய பார்த்து ஒரு கும்பிடு போடுவோம்.
# AYUSH எனப்படும் Ayurveda, Yoga, Unani, Sidddha and Homoeopathy போன்ற மருத்துவத்திற்கு ரூ.1,069 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய செய்தி. இந்த AYUSH எனப்படுவது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாற்று மருத்துவ முறை. அல்லோபதி மருத்துவ முறையில் நம்பிக்கையில்லாதவர்கள் இதனை பின்பற்றுகிறார்கள். தெருவுக்கு தெரு உள்ள +2 கூட படிக்காத, ஆபத்தான போலி மருத்துவர்களின் கொட்டத்தை அடக்க , படித்த AYUSH மருத்துவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
# "பெண்களுக்கு தனியாக வங்கிகள் துவக்கப்படும்''னு அறிவிச்ச உடனே எதிர்கட்சி தலைவி உட்பட , நாடாளுமன்றத்தில் இருந்த அத்தனை பெண்கள் முகத்திலும் சந்தோஷம்.
" வங்கி துவங்குறதெல்லாம் சரி சார். முதல்ல , இருக்குற வங்கிகள்ல , பெண்களுக்கு தனியா கழிப்பறை கட்டுங்க"னு யாருமே கோரிக்கை வைக்கவில்லையே.
# "நிர்பாயா திட்டம் "- டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் பெண்களின் பாதுகாப்பிற்காக 1000 கோடி செலவில் "நிர்பாய திட்டம் " துவங்கப்படுகிறது. இத்திட்டத்தை பற்றி வேறெதுவும் தகவல் கிடைக்கவில்லை.
# குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகத்துக்கு ரூ.15, 000 கோடி ; மதிய உணவு திட்டத்திற்கு ரூ.13,250 கோடி; மனநலம், காச நோய் , தொழு நோய் போன்றவற்றிக்கு 2,375 கோடி ஒதுக்கப்பள்ளாது . ஆனால் இவற்றை பற்றி மேற்கொண்டு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
# எந்த மருத்திற்கும் இந்தாண்டு புதிதாக வரிவிலக்கு கொடுக்கப்படவில்லை.
# பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'infrastructure status' சுகாதாரத்துறைக்கு கொடுக்கப்படவில்லை.
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறை சம்பந்தமாக எனக்கு கிடைத்த தகவல்களை கொடுத்துவிட்டேன்.http://www.youtube.com/watch?v=aRqx-MS2ZdE
சரி, சுகாதாரத்துறைய பொறுத்தவரை இந்த பட்ஜெட் எப்படி ?
புதுசா சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லை தான்.
ஆனால் நிதி பற்றாக்குறையான இந்த சமயத்தில், நடுத்தர குடும்பத் தலைவன் தன் வீட்டிற்க்கு போடும் பட்ஜெட்டை போன்றே, சாமர்த்தியமாக பட்ஜெட் போட்டுள்ளார் நமது நிதியமைச்சர்.
"வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வர வேண்டும்'' என்று அண்மையில் சொல்லப்பட்டது.
திரு ப.சிதம்பரம் அவர்களுக்கு அந்த திறமை இருக்கிறது. ஆனால் வாய்ப்பில்லை.
அவர் சார்ந்த கட்சி அடையாளத்தை தவிர்த்து பார்த்தால் , நிதியமைச்சருக்கு நான் சொல்லிக்கொள்வது: "சபாஷ் சார்".
அன்புடன் பாலாஜி.
(நான் health economics துறையில் expert கிடையாது. வளரும் மாணவன். பட்ஜெட் குறித்து நான் எழுதியதில் தவறு இருந்தால் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.)

No comments:
Post a Comment