மருந்து மட்டுமே மருத்துவம் இல்லை
*******************************
தினமும் காலையில், எய்ம்ஸ்ல இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்னு ஒரு மருத்துவ குழு, வாகனத்துல கிளம்புவோம். 45 நிமிஷம் பயணிச்சு, ஒரு காலனிக்கு போய் நோயாளிகளுக்கு இலவசமா மருத்துவம் பார்ப்போம் . மருந்துகளும் இலவசமா கொடுப்போம் . மதியம் எய்ம்ஸ்க்கு திரும்ப வந்திடுவோம்.
நேற்றும் அப்படித்தான்.
தெற்கு டெல்லியில் இருக்கும் அம்பேத்கர் நகர் காலனிக்கு போனோம். பல மாநிலத்துல இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும் resettlement colony அது.
10 மணி வாக்குல 23 வயசு பெண் தலைவலினு வந்திருந்தார். அவர் கூட யாரும் இல்லை. பரிசோதிச்சுட்டு மருந்து எழுதியிருக்கிறார் ஒரு மருத்துவர். ஆனா 5 நிமிஷத்துல அந்த பெண் தலைவலி தாங்க முடியாம, மரத்தடியில படுத்து அழ ஆரம்பிச்சுட்டார்.
"ஜூரம் இருந்துதா ? வாந்தி எடுத்தீங்களா?"னு நான் கேட்டதுக்கு மட்டும் 'ஆமாம்'னு தலை அசைத்தவர், வேற எதுக்கும் பதில் சொல்லல . தலைவலி மட்டுமே தொந்தரவுனு வந்தவர், தலையில கைய வெச்சுக்கிட்டு அழு ஆரம்பிச்சதை பார்த்த அனைவருக்கும் பதற்றம். கண்ணை திறக்கவில்லை. என்ன நோய்னு என்னால சரியா கண்டுபிடிக்க முடியல.
'மைக்ரைனா இருக்கும் . ஆனா ஒரு வேள மூலை காய்ச்சலா இருக்குமோ ?' னு சந்தேகிச்சு உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு ரெஃபர் செய்தேன். எங்க வாகனத்துல பரிசோதிக்க வசதியில்லை.
பணியாளர்கள் அவரோட செல்ஃபோனில் இருந்த நம்பருக்கு பேசி , வீட்ல இருந்தவங்கள வரவழைச்சு அனுப்பி வெச்சோம். எனக்கு ஒரே பயம்.
சீனியர் மேடம் (என்னை விட 6,7 வயசு பெரிய மருத்துவர்)," பயப்படாத பாலாஜி. ஒன்னும் ஆகாது.எனக்கு இது சீரியஸ் நோயா தோணல. அந்த பெண்ணுக்கு ஏதோ டென்ஷன் இருக்கு . நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் விசாரிப்போம்"னு சொன்னார்.
இன்னைக்கு காலை அந்த காலனிக்கு போனோம் .
அந்த பெண்ணின் விலாசம் எங்ககிட்ட இருந்தது. நானும் மேடமும் அந்த வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம்.
ஒரே துர்நாற்றம். மோசமான சுகாதார வசதிகள் . குறுகிய சந்துகள். சூரிய ஒளி உள்ளே வர முடியாத அளவுக்கு நெருக்கமான வீடுகள். 1.5 கி.மீ தூரம் நடந்து அந்த வீட்டுக்கு போனோம்….
'அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆகிருந்தா?' - எங்களுக்கு உள்ளுக்குள்ள ஒரே பயம். ஆனா அந்த பெண் சாதாரணமா வீட்டு வேலை செஞ்சுகிட்டு இருந்தார். எங்களுக்கு ஆச்சர்யம். ஆனாலும் நிம்மதி.
பெண் (நோயாளி) : நேத்து நீங்க கொடுத்த வலி மாத்திரைய சாப்பிட்டதும் கொஞ்ச நேரத்துல தலைவலி சரியாகிடுச்சு.
நானும் மேடமும் முகத்த முகத்த பாத்து சிரிச்சிகிட்டோம். அவரை தனியா விசாரிச்சோம். நாங்க நினைச்ச மாதிரி, சீரியஸான மருத்துவ பிரச்சனை ஏதும் இருக்குறதா தோணல. மைக்ரைனாகத்தான் இருக்கணும். Tension headacheஆக கூட இருக்கலாம். பயப்பட ஏதும் இல்லை. டென்ஷனை குறைத்தால் சரியாகிடும்.தலைவலி மாத்திரையே போதும். ஆனா வேற ஏதோ பிரச்சனை இருக்குனு எங்களுக்கு பட்டுச்சு.
மெல்ல மெல்ல பெண் (நோயாளி) பேச ஆரம்பிச்சார்.
நான் அங்க இருந்தா அவருக்கு சங்கடமா இருக்கும்னு, அவர் பெற்றோரை பார்த்து பேச, அடுத்த அறைக்கு போனேன்.
அந்த அறையில அப்பா அம்மா சோகமா இருந்தாங்க.
50 வயசு அப்பா. மேஸ்திரி வேலை செய்பவர். 30 வருடம் பீடி பிடிச்சதால நுரையீரல் பாதிப்பாகி இருமலுக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். சில வருஷம் முன் காச நோய் தாக்கி குணமடைந்தவர். அம்மாவுக்கும் இருமல் .
ரெண்டு பேரையும் பரிசோதிச்சு மருந்து எழுதுனேன்.
ஆனா இதெல்லாம் அவங்களுக்கு பிரச்சனையாவே இல்லை. வேற ஏதோ பிரச்சனை இருக்குனு மனசுக்கு பட்டுச்சு.
நான் : வீட்டுல பிரச்சனை இருக்குற மாதிரி தோணுது. ஏதும் குடும்ப பிரச்சனை இருக்கா ?
அப்பா அம்மா அமைதியா இருந்தாங்க.
நான் : பெண்ணுக்கு திருமணம் ஆகலைனு வருத்தமா?
அப்பா : 'ஆமாம்'னு தலையசைத்தார்.
நான் : ஏன் ? பணம் ஏதும் பிரச்சனையா ?
அப்பா : பண பிரச்சனை இல்லை. மணமகன் கிடைக்கல .
நான் : கவலபடாதீங்க. கடவுள்கிட்ட விட்டுடுங்க.சீக்கிரம் கல்யாணம் நடக்கும் .
சமாதானப்படுத்திட்டு, மேடமும் அந்த பெண்ணும் மேடமும் இருந்த அறைக்கு வந்தேன்.
எங்களுக்கு டீ எடுத்துக் கொண்டு வந்த பெண் , ஒரு ஃபோட்டோவ காட்டி,"அவ தான்"னு காட்டினார். இவ்வுளவு நேரம் வீட்டுல இருந்த நான் , இது வரை அந்த ஃபோட்டோவ கவனிக்கவேயில்லை.
நான் மேடம்கிட்ட ஆங்கிலத்துல பேச ஆரம்பிச்சேன்.
நான் : என்ன மேடம் ஆச்சு ?
மேடம் : ஃபோட்டோவுல இருக்குறது இவங்க தங்கை. போன வருஷம் இறந்துட்டாங்க.
நான் : ஐய்யோ. ரொம்ப சின்ன வயசா இருக்கே .எப்படி ?
பெண் (ஆங்கிலம் தெரியாட்டியும், நான் பேசுறத புரிஞ்சுகிட்டு): மாடியில இருந்து விழுந்துட்டா.
நான் : ?
பெண் : சாகுறப்போ அவளுக்கு 16 வயசு . பத்தாவது படிச்சிகிட்டு இருந்தா.
பெண் அழ ஆரம்பிச்சார்.
மேடம் : கவலபடாதமா. எல்லாருக்கும் மரணம் வரும்.சிலருக்கு லேட்டா வரும்.சிலருக்கு சீக்கிரம் வரும். வருத்தப்படாதமா.
மேடம் நிறைய சமாதானம் சொன்னாங்க.
(எங்களிடம் மன நல மருத்துவர் இல்லை) நாளைக்கு திரும்ப எங்க வாகனத்துக்கு வாங்கனு சொல்லிட்டு கிளம்பினோம்.
எனக்கும் மேடத்துக்கும் வருத்தம். பேசிகிட்டே நடந்தோம்.
நான் : எப்படி மேடம் அவங்களால மறக்க முடியும் . விட்டுல பொண்ணு இறந்திருக்கு. இறந்த பொண்ணோட 2 ஃபோட்டோவ வீட்டுல வெச்சுருக்காங்க. அத பாக்க பாக்க நினப்பு இருக்குமே.
மேடம் : ஆமாம் பாலாஜி . இதான் பிரச்சனை. அதுனால தான் பொண்ணுக்கு கல்யாணம் ஆகல.
மேடம் : பொண்ணுங்க அக்கா/ தங்கச்சிகிட்ட தான் நெருக்கமா இருப்பாங்க.எல்லாத்தையும் அவங்ககிட்ட பேசி பகிர்ந்துபாங்க. தங்கச்சி இறந்ததுல தான் இந்த பெண்ணுக்கு இவ்ளோ வருத்தம்.
நான் : பசங்க நாங்க அண்ணன் தம்பிகிட்ட சண்ட தான் போடுவோம் .
மேடம் : பொண்ணுங்க இயற்கை அப்படி . இப்போ இந்த பொண்ணு, அம்மா அப்பாவ பாத்துக்குணும்னு , கல்யாணம் வேணாம்னு சொல்லிகிட்டு இருக்கு.
நான் : கல்யாணாம் ஆகாததுக்கு இது தான் காரணமா ?
மேடம் : இன்னும் நிறைய பிரச்சனை. நல்ல மணமகன் கிடைக்கணும்.நல்ல வேலையுள்ள மணமகன் நிறைய எதிர்பார்ப்பார். அதுக்கு நிறைய செலவளிக்கணும்.
நான் :தமிழ் நாட்டுல ஜாதக பொருத்தம் வேற பிரச்சனை .செவ்வாய் தோஷம்னு பல பொண்ணுங்களுக்கு கல்யாணம் தள்ளிப்போகும் .
மேடம் : இங்கேயும் (வட இந்தியாவிலும்) அது இருக்கு.
பேசிக்கிட்டே வாகனத்துக்கு வந்து சேர்ந்தோம். நோயாளிகள பார்த்துட்டு கிளம்பினோம்.
நேத்து நோயாளினு நாங்க நினைச்சவருக்கு என்ன பிரச்சனைனு புரிஞ்சுது. ஆனா அவர் ''நோய்க்கு'' எங்க கிட்ட மாத்திரை தான் இல்லை. யார்கிட்டயும் இருக்காது. மறதி தான் மருந்தா இருக்கும். காலம் துக்கத்த மறக்கடிச்சுடும்.
காய்ச்சல் இருமலுக்கு வித விதமா மருந்து இருக்குற மாதிரி, நம்ம பிரச்சனைகள தீர்க்குறதுக்கும், இழப்புகள மறக்குறதுக்கும் மாத்திரை மருந்து இருந்தா நல்லா இருக்குமே.
நம்மள படைக்குறவன் அதிகமா வேலை செய்கிறான். மக்கள் தொகை 600 கோடிய தாண்டிடுச்சு.
நம்மள அழிக்குறவனும் நாள் தவறாம வேலை செய்றான். என்ன ஒன்னு, தப்பு தப்பா அழிக்குறான்.
ஆனா காக்க வேண்டியவன் என்ன செய்றான் ? நிம்மதியா தூங்குறான் போல.
பாலாஜி

*******************************
தினமும் காலையில், எய்ம்ஸ்ல இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்னு ஒரு மருத்துவ குழு, வாகனத்துல கிளம்புவோம். 45 நிமிஷம் பயணிச்சு, ஒரு காலனிக்கு போய் நோயாளிகளுக்கு இலவசமா மருத்துவம் பார்ப்போம் . மருந்துகளும் இலவசமா கொடுப்போம் . மதியம் எய்ம்ஸ்க்கு திரும்ப வந்திடுவோம்.
நேற்றும் அப்படித்தான்.
தெற்கு டெல்லியில் இருக்கும் அம்பேத்கர் நகர் காலனிக்கு போனோம். பல மாநிலத்துல இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும் resettlement colony அது.
10 மணி வாக்குல 23 வயசு பெண் தலைவலினு வந்திருந்தார். அவர் கூட யாரும் இல்லை. பரிசோதிச்சுட்டு மருந்து எழுதியிருக்கிறார் ஒரு மருத்துவர். ஆனா 5 நிமிஷத்துல அந்த பெண் தலைவலி தாங்க முடியாம, மரத்தடியில படுத்து அழ ஆரம்பிச்சுட்டார்.
"ஜூரம் இருந்துதா ? வாந்தி எடுத்தீங்களா?"னு நான் கேட்டதுக்கு மட்டும் 'ஆமாம்'னு தலை அசைத்தவர், வேற எதுக்கும் பதில் சொல்லல . தலைவலி மட்டுமே தொந்தரவுனு வந்தவர், தலையில கைய வெச்சுக்கிட்டு அழு ஆரம்பிச்சதை பார்த்த அனைவருக்கும் பதற்றம். கண்ணை திறக்கவில்லை. என்ன நோய்னு என்னால சரியா கண்டுபிடிக்க முடியல.
'மைக்ரைனா இருக்கும் . ஆனா ஒரு வேள மூலை காய்ச்சலா இருக்குமோ ?' னு சந்தேகிச்சு உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு ரெஃபர் செய்தேன். எங்க வாகனத்துல பரிசோதிக்க வசதியில்லை.
பணியாளர்கள் அவரோட செல்ஃபோனில் இருந்த நம்பருக்கு பேசி , வீட்ல இருந்தவங்கள வரவழைச்சு அனுப்பி வெச்சோம். எனக்கு ஒரே பயம்.
சீனியர் மேடம் (என்னை விட 6,7 வயசு பெரிய மருத்துவர்)," பயப்படாத பாலாஜி. ஒன்னும் ஆகாது.எனக்கு இது சீரியஸ் நோயா தோணல. அந்த பெண்ணுக்கு ஏதோ டென்ஷன் இருக்கு . நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் விசாரிப்போம்"னு சொன்னார்.
இன்னைக்கு காலை அந்த காலனிக்கு போனோம் .
அந்த பெண்ணின் விலாசம் எங்ககிட்ட இருந்தது. நானும் மேடமும் அந்த வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம்.
ஒரே துர்நாற்றம். மோசமான சுகாதார வசதிகள் . குறுகிய சந்துகள். சூரிய ஒளி உள்ளே வர முடியாத அளவுக்கு நெருக்கமான வீடுகள். 1.5 கி.மீ தூரம் நடந்து அந்த வீட்டுக்கு போனோம்….
'அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆகிருந்தா?' - எங்களுக்கு உள்ளுக்குள்ள ஒரே பயம். ஆனா அந்த பெண் சாதாரணமா வீட்டு வேலை செஞ்சுகிட்டு இருந்தார். எங்களுக்கு ஆச்சர்யம். ஆனாலும் நிம்மதி.
பெண் (நோயாளி) : நேத்து நீங்க கொடுத்த வலி மாத்திரைய சாப்பிட்டதும் கொஞ்ச நேரத்துல தலைவலி சரியாகிடுச்சு.
நானும் மேடமும் முகத்த முகத்த பாத்து சிரிச்சிகிட்டோம். அவரை தனியா விசாரிச்சோம். நாங்க நினைச்ச மாதிரி, சீரியஸான மருத்துவ பிரச்சனை ஏதும் இருக்குறதா தோணல. மைக்ரைனாகத்தான் இருக்கணும். Tension headacheஆக கூட இருக்கலாம். பயப்பட ஏதும் இல்லை. டென்ஷனை குறைத்தால் சரியாகிடும்.தலைவலி மாத்திரையே போதும். ஆனா வேற ஏதோ பிரச்சனை இருக்குனு எங்களுக்கு பட்டுச்சு.
மெல்ல மெல்ல பெண் (நோயாளி) பேச ஆரம்பிச்சார்.
நான் அங்க இருந்தா அவருக்கு சங்கடமா இருக்கும்னு, அவர் பெற்றோரை பார்த்து பேச, அடுத்த அறைக்கு போனேன்.
அந்த அறையில அப்பா அம்மா சோகமா இருந்தாங்க.
50 வயசு அப்பா. மேஸ்திரி வேலை செய்பவர். 30 வருடம் பீடி பிடிச்சதால நுரையீரல் பாதிப்பாகி இருமலுக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். சில வருஷம் முன் காச நோய் தாக்கி குணமடைந்தவர். அம்மாவுக்கும் இருமல் .
ரெண்டு பேரையும் பரிசோதிச்சு மருந்து எழுதுனேன்.
ஆனா இதெல்லாம் அவங்களுக்கு பிரச்சனையாவே இல்லை. வேற ஏதோ பிரச்சனை இருக்குனு மனசுக்கு பட்டுச்சு.
நான் : வீட்டுல பிரச்சனை இருக்குற மாதிரி தோணுது. ஏதும் குடும்ப பிரச்சனை இருக்கா ?
அப்பா அம்மா அமைதியா இருந்தாங்க.
நான் : பெண்ணுக்கு திருமணம் ஆகலைனு வருத்தமா?
அப்பா : 'ஆமாம்'னு தலையசைத்தார்.
நான் : ஏன் ? பணம் ஏதும் பிரச்சனையா ?
அப்பா : பண பிரச்சனை இல்லை. மணமகன் கிடைக்கல .
நான் : கவலபடாதீங்க. கடவுள்கிட்ட விட்டுடுங்க.சீக்கிரம் கல்யாணம் நடக்கும் .
சமாதானப்படுத்திட்டு, மேடமும் அந்த பெண்ணும் மேடமும் இருந்த அறைக்கு வந்தேன்.
எங்களுக்கு டீ எடுத்துக் கொண்டு வந்த பெண் , ஒரு ஃபோட்டோவ காட்டி,"அவ தான்"னு காட்டினார். இவ்வுளவு நேரம் வீட்டுல இருந்த நான் , இது வரை அந்த ஃபோட்டோவ கவனிக்கவேயில்லை.
நான் மேடம்கிட்ட ஆங்கிலத்துல பேச ஆரம்பிச்சேன்.
நான் : என்ன மேடம் ஆச்சு ?
மேடம் : ஃபோட்டோவுல இருக்குறது இவங்க தங்கை. போன வருஷம் இறந்துட்டாங்க.
நான் : ஐய்யோ. ரொம்ப சின்ன வயசா இருக்கே .எப்படி ?
பெண் (ஆங்கிலம் தெரியாட்டியும், நான் பேசுறத புரிஞ்சுகிட்டு): மாடியில இருந்து விழுந்துட்டா.
நான் : ?
பெண் : சாகுறப்போ அவளுக்கு 16 வயசு . பத்தாவது படிச்சிகிட்டு இருந்தா.
பெண் அழ ஆரம்பிச்சார்.
மேடம் : கவலபடாதமா. எல்லாருக்கும் மரணம் வரும்.சிலருக்கு லேட்டா வரும்.சிலருக்கு சீக்கிரம் வரும். வருத்தப்படாதமா.
மேடம் நிறைய சமாதானம் சொன்னாங்க.
(எங்களிடம் மன நல மருத்துவர் இல்லை) நாளைக்கு திரும்ப எங்க வாகனத்துக்கு வாங்கனு சொல்லிட்டு கிளம்பினோம்.
எனக்கும் மேடத்துக்கும் வருத்தம். பேசிகிட்டே நடந்தோம்.
நான் : எப்படி மேடம் அவங்களால மறக்க முடியும் . விட்டுல பொண்ணு இறந்திருக்கு. இறந்த பொண்ணோட 2 ஃபோட்டோவ வீட்டுல வெச்சுருக்காங்க. அத பாக்க பாக்க நினப்பு இருக்குமே.
மேடம் : ஆமாம் பாலாஜி . இதான் பிரச்சனை. அதுனால தான் பொண்ணுக்கு கல்யாணம் ஆகல.
மேடம் : பொண்ணுங்க அக்கா/ தங்கச்சிகிட்ட தான் நெருக்கமா இருப்பாங்க.எல்லாத்தையும் அவங்ககிட்ட பேசி பகிர்ந்துபாங்க. தங்கச்சி இறந்ததுல தான் இந்த பெண்ணுக்கு இவ்ளோ வருத்தம்.
நான் : பசங்க நாங்க அண்ணன் தம்பிகிட்ட சண்ட தான் போடுவோம் .
மேடம் : பொண்ணுங்க இயற்கை அப்படி . இப்போ இந்த பொண்ணு, அம்மா அப்பாவ பாத்துக்குணும்னு , கல்யாணம் வேணாம்னு சொல்லிகிட்டு இருக்கு.
நான் : கல்யாணாம் ஆகாததுக்கு இது தான் காரணமா ?
மேடம் : இன்னும் நிறைய பிரச்சனை. நல்ல மணமகன் கிடைக்கணும்.நல்ல வேலையுள்ள மணமகன் நிறைய எதிர்பார்ப்பார். அதுக்கு நிறைய செலவளிக்கணும்.
நான் :தமிழ் நாட்டுல ஜாதக பொருத்தம் வேற பிரச்சனை .செவ்வாய் தோஷம்னு பல பொண்ணுங்களுக்கு கல்யாணம் தள்ளிப்போகும் .
மேடம் : இங்கேயும் (வட இந்தியாவிலும்) அது இருக்கு.
பேசிக்கிட்டே வாகனத்துக்கு வந்து சேர்ந்தோம். நோயாளிகள பார்த்துட்டு கிளம்பினோம்.
நேத்து நோயாளினு நாங்க நினைச்சவருக்கு என்ன பிரச்சனைனு புரிஞ்சுது. ஆனா அவர் ''நோய்க்கு'' எங்க கிட்ட மாத்திரை தான் இல்லை. யார்கிட்டயும் இருக்காது. மறதி தான் மருந்தா இருக்கும். காலம் துக்கத்த மறக்கடிச்சுடும்.
காய்ச்சல் இருமலுக்கு வித விதமா மருந்து இருக்குற மாதிரி, நம்ம பிரச்சனைகள தீர்க்குறதுக்கும், இழப்புகள மறக்குறதுக்கும் மாத்திரை மருந்து இருந்தா நல்லா இருக்குமே.
நம்மள படைக்குறவன் அதிகமா வேலை செய்கிறான். மக்கள் தொகை 600 கோடிய தாண்டிடுச்சு.
நம்மள அழிக்குறவனும் நாள் தவறாம வேலை செய்றான். என்ன ஒன்னு, தப்பு தப்பா அழிக்குறான்.
ஆனா காக்க வேண்டியவன் என்ன செய்றான் ? நிம்மதியா தூங்குறான் போல.
பாலாஜி

No comments:
Post a Comment